இலங்கையில் நிரந்தரமாக மூடப்படும் நோர்வே தூதரகம்!

0
145

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் 31 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக மூடப்படும் அறிவிக்கப்பட்டது.

அத்துடன் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் இலங்கை மற்றும் மாலைதீவுடனான இருதரப்பு உறவுகளை கையாளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வெளிநாட்டில் உள்ள தனது பணிகளில் பல மாற்றங்களைச் செய்வதாகவும், கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து வெளிநாட்டு தூதரங்களை மூடுவதாகவும் கடந்த ஆண்டு நோர்வே வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.