பொகவந்தலாவை, பூசாரி (செப்பல்டன்) தோட்டத்தைச் சேர்ந்த 15 வயதான மாணவி தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ. பிரியதர்ஷினி என்ற மாணவியே தனது வீட்டுக்குள் வைத்து ஞாயிற்றுக்கிழமை (23) இரவு தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சிறுமியின் மூத்த சகோதரி தன்னை தூற்றியதால் இந்த முடிவை எடுத்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.