இளைஞர்களை மலம் தின்ன வற்புறுத்தி கொடுமை!

0
209

மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் இளைஞர்களை மலம் தின்ன வற்புறுத்தி கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களது வீடு புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

பொலிஸார் அதிரடி

கடந்த ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து கடந்த புதன்கிழமை போலீஸார் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கையை துவக்கினர்.

இதுகுறித்து ஷிவ்புரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில்,

ஷிவ்புரி மாவட்டம் வர்காதி கிராமத்தைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு தலித் இளைஞர்கள், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் போனில் பேசினர்.

இளைஞர்களை மலம் தின்ன வற்புறுத்தி கொடுமை; பொலிஸார் அதிரடி! | Forced Youth To Eat Excrement India

இதையடுத்து, அந்த குடும்பத்தினர் அந்த தலித் இளைஞர்களை கடந்த ஜூன் 30 ஆம் திகதி வீட்டுக்கு வரவழைத்து கொடூரமான முறையில் தாக்கியதுடன், மனித மலத்தை உண்ணும்படி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

செருப்புமாலை அணிவித்து ஊர்வலம்

அதுமட்டுமல்லாது அந்த இளைஞர்களுக்கு செருப்புமாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலானதையடுத்து மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவிடம் இருந்து கடும் நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறைக்கு அறிவுறுத்தல் வந்ததை அடுத்து பொலிஸார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.