கடந்த வருட ஜுலை மாத நிலைமை மீண்டும் இலங்கையில் ஏற்படும்! மத்திய நிதியமைச்சர் எச்சரிக்கை

0
190

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் சீர்குலைந்தால் நாடு கடந்த வருடம் ஜுலை மாதம் இருந்த நிலைமைக்கு திரும்புமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எச்சரித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து மீள கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட உலக நாடுகள் பூரண ஆதரவை தந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.