திருகோணமலையில் இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இச் சம்பவம் நேற்றிரவு (23) இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதம் எழுதி விட்டு தற்கொலை
கந்தளாய் பியந்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கயான் மதுசங்க என்கின்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையிருந்து கொழும்புக்குச் சென்ற இரவு நேர தபால் கடுகதி ரயில் மோதியே அவா் உயிாிழந்துள்ளாா்.
உயிரிழந்த நபர் கடிதமொன்றை எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவா் திருமணமானவர் என தொியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.