திருமணத்திற்கு சென்று வீடு திரும்பிய போது நிகழ்ந்த அசம்பாவிதம்..

0
212

கொழும்பு – ஹோமாகமவில் உள்ள தலகல பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (22-06-2023) இடம்பெற்றுள்ளது.

திருமணத்திற்கு சென்று வீடு திரும்பிய போது நிகழ்ந்த அசம்பாவிதம்: 8 பேருக்கு நேர்ந்த நிலை | Colomobo Homagama Bus Accident Marriage Funciton

தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருமண நிகழ்வொன்றுக்காக சென்ற பேருந்து, மீள திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.