பதின்மூன்று வயது மகளின் மோசமான நடத்தையால் கடும் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்த பெற்றோர்கள் வெலிமடை பொலிஸ் நிலையத்தில் விஷம் அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து ஆபத்தான நிலையில் சிறுமியின் தாய்- தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிமடையைச் சேர்ந்த தமிழ் தம்பதியினரே விபரீத முடிவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
28 வயதுடைய இளைஞனுடன் காதல் உறவு
ஏற்கனவே சிறுமி சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டதாகவும் பின்னர் தந்தையினால் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதின்மூன்று வயது மகளின் மோசமான நடத்தையால், இந்த தம்பதியினர் சில காலமாக கடும் விரக்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
சிறுமி 28 வயதுடைய இளைஞனுடன் காதல் உறவு கொண்டிருந்ததாகவும், ஆறு நாட்களுக்கு முன்னர் இளைஞனுடன் சென்று வாழ்ந்து வந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
பின்னர், வெலிமடை நகரில் சுற்றித் திரிந்த சிறுமியை, பொலிசார் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் பெற்றோரை வரவழைத்த பொலிசார் சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்த நிலையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.
பெற்றோர் தற்கொலை முயற்சி
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்குள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். பின்னர், தம்பதியை வெலிமடை மருத்துவமனையில் அனுமதிக்க பொலிசார் ஏற்பாடு செய்துள்ளனர். எனினும் பதுளை வைத்தியசாலையில் இருந்து தந்தை தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதின்மூன்று வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 28 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்த நிலையில் எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதோடு பாதிக்கப்பட்ட சிறுமி மீண்டும் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் வெலிமடை பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் சம்பத் அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்று வருகின்றன.