கம்பளை யுவதியின் சடலம் இன்று தோண்டி எடுப்பு…

0
211

கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது யுவதியுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை நீதவான் முன்னிலையில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸார் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்பட்ட அச் சிறுமியின் கொலை வழக்கில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று வாக்குமூலம் வழங்கி உள்ளார்.

வாக்குமூலம்

அந்த வாக்குமூலத்தில் குறித்த யுவதியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.