ரணிலுக்கு பூரண ஆதரவு: லொஹான் பகிரங்க அறிவிப்பு

0
41

சிறிலங்கா அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) தனது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Logan Ratwatte) தெரிவித்துள்ளார். பொலன்னறுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அதன்போது அவ்ர் கூறியதாவது, “என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்தவன் உங்களது அரசாங்கத்தில் அமைச்சராக உங்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை.

ஆனால் இன்று உங்களது அரசாங்கத்தில் ஒரு இராஜாங்க அமைச்சர் பதவியை வகித்து இந்த நாட்டுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு நான் பெருமையடைகிறேன்.

இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அடித்தளமிட்டீர்கள்.

எனவே இந்த நாட்டை மீண்டும் பொறுப்பேற்குமாறு அதிபரிடம் கேட்டுக்கொள்கின்றோம். தனிப்பட்ட முறையில் எனது சிறந்த ஆதரவை உங்களுக்கு வழங்குவேன் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.