உலகையே உலுக்கிய பூகம்பம்; 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி!

0
288

உலகை உலுக்கிய துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்னிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது.

உலகை உலுக்கிய நிலநடுக்கம்; 34 ஆயிரத்தை தாண்டிய பலி! | Earthquake Turkey More Than 34 Thousand Victims

அழு குரலும், மரண ஓலமும் ஓயவில்லை

ஆனால் அந்த இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை. உருக்குலைந்த கட்டிடங்களில் அள்ள அள்ள பிணங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் இருநாடுகளிலும் நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்து விட்டது. 92 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

உலகை உலுக்கிய நிலநடுக்கம்; 34 ஆயிரத்தை தாண்டிய பலி! | Earthquake Turkey More Than 34 Thousand Victims

பலியானவர்களில் துருக்கியில் மட்டுமே 29 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் சிரியாவில் வெள்ளிக்கிழமைக்கு பிறகு பலி எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அங்கு கடைசியாக வெளியான தகவலின் படி நிலநடுக்கத்துக்கு சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.