யாழில் கணவன் உயிரிழந்த செய்தியை கேட்டதும் மனைவியும் உயிரிழப்பு

0
255

கணவன் உயிரிழந்த செய்தியை கேட்டதும் மனைவி தனது உயிரிழந்த  சம்பவம் சொக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவை சேர்ந்த பெண் 61 வயதான ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இவரது கணவர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழில் கணவன் உயிரிழந்த செய்தியை கேட்டதும் மனைவியும் உயிரிழப்பு | News Of Her Husband S Death In Jaffna

கணவனின் மரண செய்தியை தொலைபேசி ஊடாக கேட்ட மனைவி தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.