பிரபல நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தலுக்குள் கண்ணாடி துண்டுகள் இருப்பதை வாடிக்கையாளர் ஒருவர் கண்டெடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
போத்தலுக்குள் கண்ணாடி துண்டு
போத்தலுக்குள் இருக்கும் கண்ணாடி துண்டு தீங்கு விளைவிக்கும் நிலையில் உள்ள கூர்மையான துண்டு என வாடிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து கண்ணாடி துண்டு போத்தலுடன், நுகர்வோர் சங்கத்தில் பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.
நுகர்வோர் அதிகாரசபையின் பணிப்பாளர் முறைப்பாட்டைப் பொறுப்பேற்று எழுத்துப்பூர்வ முறைப்பாட்டிற்கு பதிலளிப்பார் என கூறப்படும் அதேவேளை போத்தலுக்கு சீல் வைத்து சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் அதிகாரி கூறியுள்ளார்.