அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை; வெளியானது வர்த்தமானி!

0
333

அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தற்போது கொண்டு வரப்படும் அரிசி தொகை மற்றும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதங்கள் வெளியிடப்பட்ட ஓடர்களை விசேட அனுமதிப் பத்திரத்தின் ஊடாக துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.