படகு கவிழ்ந்ததில் பதின்ம வயது 2 சிறுமிகள் மாயம்; ஒருவரின் சடலம் மீட்பு!

0
252

சூரியவெவ-மஹாவெலிகடஆர வாவியில் சவாரியின் போது படகு கவிழ்ந்ததில் பதின்ம வயது மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது படகில் 8 பேர் பயணித்துள்ளதாகவும், படகில் பயணம் செய்த குழந்தை உட்பட 5 பேர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன மூன்று சிறுமிகளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

8 மாத குழந்தை கவலைக்கிடம்

நீரில் மூழ்கி மீட்கப்பட்ட 8 மாத குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 18, 17 மற்றும் 10 வயதுடைய பெண்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் குருநாகல் பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் உறவினர் நிகழ்வு ஒன்றிற்காக இந்த பகுதிக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய படகில் 08 பேர் பயணித்ததால் வாவியின் நடுவே படகு கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டாம் இணைப்பு

சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு

சூரியவெவ மஹாவெலிகடஹார வாவியில் படகு கவிழ்ந்து காணாமல் போன மூன்று சிறுமிகளில் 10 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

18 மற்றும் 17 வயதுடைய காணாமல் போன ஏனைய இரு சிறுமிகளை மீட்கும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த படகில் 8 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் 5 பேர் காப்பாற்றப்பட்டிருந்தனர்.

இதில் காப்பாற்றப்பட்ட 8 மாத குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://www.taatastransport.com/