சாகித்ய ரத்னா விருது பெற்ற மலையக மூத்த எழுத்தாளர் சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் காலமானார். அவர் தனது 88வது வயதில் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார்.
ஈழத்தின் சிறுகதையாளரும், நாவலாசிரியரும், இலக்கிய ஆய்வாளருமான இவர் இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவராக அறியப்பட்டவர் .
இவர் அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மிளிர்ந்து, தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரது மறைவுக்கு பல்லரும் இரங்கல்களை கூறிவருகின்றனர்.