அரசாங்கத்திடம் அமைச்சர் கீதா குமாரசிங்க கோரிக்கை

0
449

நாட்டில் அழகு சாதன நிலையங்களை நடத்துவதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரியுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அழகுசாதனப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் பெரும்பாலான அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்திடம் அமைச்சர் கீதா குமாரசிங்க முன்வைத்த கோரிக்கை | Minister Geetha Kumarasinghe S Request Government

வேலையின்றி நான்கு லட்சம் பேர்

இதனால், அந்தத் துறையில் பணியாற்றிய சுமார் நான்கு லட்சம் பேர் வேலையின்றி தெருவுக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர்களை நம்பியிருந்த சுமார் 15,000 பேர் நிர்க்கதியாகி உள்ளமை தெரிய வருவதாகவும் அமைச்சர் கீதா குமாரசிங்க கூறியுள்ளார்.  

அரசாங்கத்திடம் அமைச்சர் கீதா குமாரசிங்க முன்வைத்த கோரிக்கை | Minister Geetha Kumarasinghe S Request Government