சீன கப்பல் விவகாரம்; ஜனாதிபதி ரணிலிடம் கவலை தெரிவித்த இந்தியா

0
476

இலங்கைக்கு சீன கப்பல் விஜயம் மேற்கொள்வது குறித்த தனது கரிசனையை இந்தியா இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா தனது தெளிவான கரிசனையை வெளியிட்ட போதிலும் சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் இலங்கை வரும் என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது.

சீன கப்பல் விவகாரம் ; ஜனாதிபதி ரணிலிடம் கரிசனையை   வெளியிட்ட  இந்தியா | Chinese Shipping Issue India Expressed Concern

இந்த நிலையிலேயே இந்தியா தனது கரிசனையை ஜனாதிபதியிடம் வெளியிட்டுள்ளது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி அலுவலகமோ கொழும்பில் உள்ள இந்திய தூதரகமோ உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

எனினும் இந்த விடயம் குறித்த தனது கரிசனையை இந்தியா மிக உயர்மட்டத்தில் வெளியிட்டதாக இந்த விவகாரங்கள் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தததாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.