அடுத்தடுத்து நடக்கும் நடிகைகளின் தற்கொலை!!

0
805

சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த நடிகை சஹானா உயிரிழந்த நிலையில், தற்போது நடிகை பல்லவி தேய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை பல்லவி தேய்

கொல்கத்தாவில் வாழ்ந்து வரும் பிரபல நடிகை பல்லவி தேய் பல சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் தனது நண்பர் சாக்னிக் சக்ரபோர்த்தி என்பவருடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தான் வசித்து வந்த வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை! அடுத்தடுத்து நடக்கும் நடிகைகளின் தற்கொலைக்கு காரணம் என்ன?

அடுத்தடுத்து நடிகைகள் தற்கொலை

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தின் மர்மம் விலகாத நிலையில், சில தினங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த நடிகை சஹானா திருமணமான ஒரு வருடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பல்லவி தேயின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பல்லவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே இது கொலையா? தற்கொலையா? என்பது தெரியவரும் நிலையில், பல்லவியின் நண்பர் சாக்னிக்கிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.