வவுனியாவில் பட்டப்பகலில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து சங்கிலி அறுப்பு!

0
389

வவுனியாவில் பட்டப்பகலில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து சங்கிலி ஒன்று அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வவுனியா – யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள வர்த்தக நிலையத்திற்குச் சென்ற இளைஞன் அங்கு நின்ற பெண்ணை அழைத்து வர்த்தக நிலையத்திற்குள் வைத்து ஒருவருடைய முகவரியை விசாரிப்பது போல் விசாரித்துள்ளான்.

பின் குறித்த பெண் அணிந்திருந்த இரண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு அந்த இளைஞன் தப்பியோடியுள்ளான்.

தப்பியோடிய இளைஞன் அவனுடன் கூட வந்திருந்தவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி இருவருமாகத் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.