கண்டியில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்

0
588

கண்டியில் வெளிநாட்டுப் பெண் ஒருவரை குழுவொன்று பாலியல் ரீதியில் துன்புறுத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னைத் துன்புறுத்திய குழுவை வெளிநாட்டுப் பெண் எதிர்கொள்ள முயற்சித்த போது, அந்தக் குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தை வெளிநாட்டுப் பெண்ணுடன் சென்ற மற்றொரு வெளிநாட்டவர் காணொளியாக பதிவு செய்துள்ளார். இந்த சம்பவத்தை எதிர்நோக்கிய வெளிநாட்டுப் பெண் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதுடன் இது போன்ற மோசமான சம்பவத்தை இலங்கையில் எதிர்கொண்டதில்லை என  கூறியுள்ளார்.

இது இலங்கையில் நான் எதிர்நோக்கிய முதல் மோசமான சம்பவம்.அந்த குழுவினர் தன்னை தொட கூடாத இடங்களில் தொட்டனர் எனவும் உடம்பில் உரசினர். எதிரில் கைகளை நீட்டும் போது எப்படி நாங்கள் வீதியில் நடந்து செல்வது என அந்த வெளிநாட்டுப் பெண் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த குழுவிற்கு எதிராக இதுவரை பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி ஆங்கில இணையத்தளம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  எனினும் அதனை பார்வையிட முடியவில்லை.