பதுளை – பண்டாரவளை பிரதான வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

0
420

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியை மறித்து அரசாங்கத்துக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மக்கள் முன்னெடுத்துள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

பசறை – பதுளை பிரதான வீதி ஏழாம் கட்டை பகுதியிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் உருளிப்பட்டைகளை எரித்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பசறை நகரிலும், நமுனுகுல, பள்ளக்கெட்டுவ நகரங்களிலும் மக்கள் ‘கோட்டா கோ ஹோம்’ என்ற கோஷங்கள், முழக்கங்கள் ஓங்கி ஒலிக்கப் போராடத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

நமுணுகுல பிரதான வீதியில் இன்று வர்த்தகர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து வீதியினை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையை அவதானிக்க முடிந்துள்ளது.

Gallery

Gallery