பெண் சினைப்பரை படுகாயமடைந்த நிலையில் கைவிட்டு தப்பியோடிய ரஷ்ய படைகள்!

0
355

உக்ரைன் போர்க்களத்தில் பெரும் கொலைகளை புரிந்த தமது பெண் சினைப்பர் படுகாயமடைந்த நிலையில் அவரை கைவிட்டு ரஷ்ய படைகள் தப்பியோடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காயமடைந்த குறித்த பெண் சினைப்பர் Irina Starikova எனவும் அவர் செர்பிய நாட்டவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் போர்க்களத்தில் பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் என 40 பேரை அவர் சினைப்பர் தாக்குதலில் கொன்று குவித்துள்ளார்.

அத்துடன் இவரை 2014 ஆம் ஆண்டு முதல் உக்ரைன் இராணுவத்தினர் தேடி வந்துள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் உக்ரைன் படைகளால் மீட்கப்பட்ட அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண் சினைப்பர் உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் பிரிவினைவாதப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். கடந்த 2014 முதல் ரஷ்யாவின் உதவியுடன் உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றார்.