எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே நாட்டை ஆட்சி செய்யும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் எவ்வாறான போராட்டம் நடத்தினாலும் அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி கூட்டத்தை கூட்டினாலும், சஜித் காலி முகத்திடலுக்கு மக்களை அழைத்து வந்தாலும் யார் என்ன கூறினாலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.
கொரோனா தொற்றால் செய்ய முடியாமல் போன விடயங்கள் அடுத்து வரும் வருடங்களில் மக்களுகாக செய்யப்படும் என்பதனை இந்த இடத்தில் உறுதியளிக்கின்றேன்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கோரிய அமைச்சர், அவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.