பள்ளியில் விஷம் குடித்த மாணவி! – ஆசிரியர் தண்டனை கொடுத்ததாக புகார்!

0
512
Poisoned student school - Complaint author sentenced india tamil news

ராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்துார் தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவி ஷாலினி, 17,வீட்டுப்பாடம் படிக்காததால்வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில்,மாணவி விஷம் குடித்து மயங்கினார்.Poisoned student school – Complaint author sentenced india tamil news

முதுகுளத்துார் அருகே எம்.சாலைகிராமத்தை சேர்ந்த ஷாலினி,இரு நாட்களுக்கு முன் வீட்டுப்பாடம் படிக்கவில்லை எனக்கூறி வகுப்பறைக்கு வெளியே நிறுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

நேற்று முன்தினம் மதியம் பள்ளி இடைவேளையில்விஷம் குடித்ததாக சக மாணவியிடம் கூறிய ஷாலினிமயங்கி விழுந்தார்.

ஆசிரியர்கள் அவரைஅரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்துபெற்றோர் சண்முகநாதன், முத்து இருளாயி கூறுகையில்,’உங்கள் மகள் மயங்கி விழுந்துவிட்டாள் என எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். சென்று பார்த்த போது மயங்கி கிடந்தாள்.

வீட்டுப்பாடம்படிக்கவில்லைஎன வகுப்பறைக்கு வெளியேஆசிரியர்நிற்க வைத்துள்ளார். அவமானமாக கருதி விஷம் குடித்துள்ளாள்’ என்றனர்.தலைமைஆசிரியர் சுலைமான் கூறுகையில், ”மாணவியைவகுப்பறைக்குவெளியே நிற்க வைக்கவில்லை.

பள்ளிக்கு வெளியே சென்று விஷம் குடித்துள்ளார். ஆசிரியர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவியின் பெற்றோர் வந்தவுடன் ஒப்படைத்துவிட்டனர்,”என்றார்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :