இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 832 பேர் கொல்லபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் மூன்று பிரெஞ்சு நபர்களும் இருக்கலாம் என கூறப்படுகிறது. 832 people died Indonesia tsunami
இந்தோனேஷியாவின் Celebes தீவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலர் கொல்லப்பட்டனர். இதுவரை கணக்கெடுப்பின்படி, 832 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் காணாமல் போனோர் விபரங்கள் சேமிக்கப்பட்டு வருகின்றது. இவர்களில் 71 வெளிநாட்டவர் எனவும், அவர்களில் மூவர் பிரெஞ்சு குடியுரிமை கொண்டவர்கள் எனவும் அவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி மக்ரோன் தனது ஆதரவை இந்தோனேஷிய மக்களுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ‘பிரான்ஸ் இந்தோனேஷியாவுக்கு ஆதரவாக உள்ளது. அதிகாரிகளுடம் தொடர்புகொண்டு அவர்களுக்கு தேவையான உதவியினை செய்ய தயாராக இருக்கின்றோம்!’ என எலிசேயில் இருந்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவுக்கான பிரெஞ்சு தூதரகம் காணாமல் போன பிரெஞ்சு நபர்கள் குறித்து எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. உத்தியோகபூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும் என அரச பேச்சாளர் தெரிவித்துள்ளார்.