தெலுங்கு திரையுலகினரை ஆட்டி படைத்த பின் தமிழ் திரையுலகிற்குள் வந்து மிரட்டிக் கொண்டிருந்தார் நடிகை ஸ்ரீரெட்டி. தமிழ் திரையுலகிற்குள் இருக்கும் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர். முருதாஸ் மீது பாலியல் புகார் வைத்தார் ஸ்ரீரெட்டி. அதிலும், எங்கே எப்படி என்ற விவரத்தோடு இருந்தன அந்த புகார்கள். Sree Reddy targets Sachin Tendulkar
இந்த நிலையில் அடுத்ததாக பிரல கிரிக்கெட் வீரர் சச்சின் மீது தற்போது தனது ஃபேஸ்புக்கில் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். சார்மிங்கான நடிகையுடன் சச்சின் சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்புக்கு ஒரு பிரபலம் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், ரொமான்ஸ் விளையாட்டிலும் சச்சின் தேறியிருப்பார் என்று தான் நம்புவதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவுக்கு சச்சின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.