குளவிக் கொட்டுக்கு இலக்காகி 20 மாணவர்கள் வைத்தியசாலையில்

0
784
25 students hospital following wasp attack

மஸ்கெலியா சிங்கள மகா வித்தியாலயம் ஒன்றில் மாணவர்கள் 25 பேர் சற்று முன்னர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (25 students hospital following wasp attack)

பாடசாலையின் மைதானத்தில் குறித்த மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் இருந்த பாரிய கல்லின் அடிப் பகுதியில் காணப்பட்ட குளவி கூடு கலைந்து மாணவர்களை கொட்டியுள்ளது.

இதன்போது குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தரம் 6,7,8 வகுப்பறைகளை சேர்ந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தொடர்ந்தும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 25 students hospital following wasp attack