ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. Important notice British Europe
உடன்பாடற்ற பிரெக்சிற் ஏற்படுத்தப்படும் பட்சத்தில், ஐரோப்பிய ஒன்றிய வீதிகளில் பயணிக்க பிரித்தானிய சாரதிகள் சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறவேண்டிய நிலை ஏற்படும்.
உடன்பாடற்ற பிரெக்சிற்கு தற்போது பிரித்தானியா தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு இடம்பெற்றால் ஐரோப்பிய ஒன்றித்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் எதிர்வரும் 2019 மார்ச் மாதத்திற்கு பின்னர், ஒன்றியத்தின் வீதிகளை பயன்படுத்த முடியாது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணிக்கும் பிரித்தானியர்கள், தமது சாரதி அனுமதிப்பத்திரம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகின்றது.
மேலும் அடுத்த ஆண்டுக்குள் காலாவதியாகும் கடவுச் சீட்டுக்கள் வைத்திருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக புதிய ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது பிரித்தானியாவில் உள்ள சில அஞ்சலகங்களில் 5.50 யூரோ கட்டணத்தில் சர்வதேச ஓட்டுநர் அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது.
உடன்பாடற்ற பிரெக்சிற் எட்டப்படும் போது ஒன்றியத்தின் சலுகைகளை பிரித்தானியா இழக்கும் என்பதனால், உடன்பாடுகளுடனான பிரெக்சிற்றிற்கு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
tags :- Important notice British Europe
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- பிரித்தானியாவில் முதல் முறையாக… இறந்த மகனின் விந்தணுவை வைத்து பேரக்குழந்தையை பெற்றெடுத்த பெற்றோர்!!
- பிரித்தானியாவில் திருமணத்துக்கு சிலமணி நேரத்துக்கு முன் மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
- பிரித்தானியாவில் இளம் ஜோடிக்கு லாட்டரியில் கிடைத்த அதிர்ஷ்டம்
- பிரித்தானியாவில் திறந்து வைக்கப்படவுள்ள உலகின் மிகப்பெரிய காற்றாலை!
- இயந்திரக் கோளாறு காரணமாக கடலுக்குள் இறங்கிய விமானம்
- காவியத் தலைவியாய் நம் நினைவலைகளில் என்றும் வாழும் இளவரசி டயானா!!