ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

0
713
Johnston Fernando remorse

{ Johnston Fernando remorse }
முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை நாளைய தினம் வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோடி சம்பவம் தொடர்பில் மூவரும் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

குறித்த வழக்கை நாளைய தினம் முதல் தொடர் விசாரணையாக நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

Tags: Johnston Fernando remorse

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites