கர்ப்பிணிப் பெண் மீது கொடூரத் தாக்குதல்!

0
526
Pregnant Woman Attack Thelipali

கடன் கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட தகராறின் காரணமாகக் கத்திக்குத்துக்கு இலக்கான கர்ப்பிணிப் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். Pregnant Woman Attack Thelipali

குறித்த சம்பவம் தெல்லிப்பழை வீமன்காமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த கர்ப்பிணிப் பெண் தனது வீட்டுக்கு அயலிலுள்ள குடும்பமொன்றுக்கு கடனாக வழங்கிய பணத்தை மீளக் கேட்ட போதே கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் தனது வயிற்றுப் பகுதியில் படுகாயமடைந்த குறித்த கர்ப்பிணிப் பெண் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் தெல்லிப்பழைப் பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவத்தில் தெல்லிப்பழை வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான கர்ப்பிணிப் பெண்ணே படுகாயமடைந்தவராவார்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags: Breaking New, SriLanka Top News, Time Tamil, Today Tamil News, World News , Tamil New News