நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சினால் நேற்று (14) முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Government Staff Salary Problem Commission Appointed Tamil News
அதன்படி அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில் ஆராய விசேட சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக இவ்வாணைக்குழுவுக்கு இரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் சம்பள முரண்பாடு காரணமாக பல அரச கட்டமைப்புகளில் வேலை நிறுத்தம் தொடர்பான எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ள நிலையில் இந்த விசேட ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- தனியார் பேரூந்துகளில் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு தடை
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- பாம்பன் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்பு பணியில்