இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்

0
1112
second day continues protest female prisoners

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் சிலர் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. (second day continues protest female prisoners)

வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் சுமார் 20 பேர் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நேற்று காலை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இரண்டாவது நாளான இன்று இதுகுறித்து ஆராய்வதற்கு இன்று காலை அதிகாரியொருவரை சிறைச்சாலைக்கு அனுப்பவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்ப்பு நடவடிக்கையைக் கைவிட்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு அவர்களுக்கு தெரியப்படுத்துமாறு, சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.எம்.ஆர். அதிகாரி தெரிவித்துள்ளார்.

கவனயீர்ப்பு நடவடிக்கையை கைவிடாவிடின் எவ்விதப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்களே இவ்வாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெலிக்கடை சிறைச்சாலையில் பணிபுரிந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கு, போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இடமாற்றம் வழங்கப்பட்டமைக்கு, சூட்சுமமாக எதிர்ப்புத் தெரிவித்து இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக நீதியமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; second day continues protest female prisoners