கருணாநிதி இறந்து விட்டதால் இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இப்போது இசட் பிளஸ் பாதுகாப்பு இல்லை. TamilNadu following withdrawal of Z plus Karunanidhis death
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் ஏற்கனவே மத்திய அரசின் ‘இசட்பிளஸ்’ கமாண்டோ பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த ‘இசட்பிளஸ்’ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த இசட்பிளஸ் பாதுகாப்பு படையும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது யாருக்கும் ‘இசட்பிளஸ்’ பாதுகாப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜனதா கட்சித் தலைவராக இருந்த சுப்பிரமணியசாமிக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பே ‘இசட்பிளஸ்’ பாதுகாப்பு படை விலக்கிக் கொள்ளப்பட்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இதே போல் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் சாதாரண கமாண்டோ படை பாதுகாப்புதான் உள்ளது.
‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை மத்திய உளவுப்பிரிவு தக்க ஆதாரங்களை சேகரித்து, என்னென்ன அச்சுறுத்தல் உள்ளது என்பதை பட்டியலிட்டு, உள்துறை அமைச்சகத்துக்கு வழங்கும். அதை மத்திய அரசு பரிசீலித்து தான் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பை வழங்குகிறது.
இந்த அடிப்படையில் தான் ஜெயலலிதாவுக்கு 91-ம் ஆண்டில் இருந்தும், கருணாநிதிக்கு 1997-ம் ஆண்டில் இருந்தும் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இருவரும் இறந்து விட்டதால் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இப்போது ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இசட் பிளஸ் பாதுகாப்பு என்றால் தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி) கமாண்டோ வீரர்கள் 8 பேர் எந்திர துப்பாக்கியுடன் எப்போதும் உடன் வருவார்கள். 3 ஷிப்டாக பணியாற்றும் வகையில் குறைந்தது 24 பேர் இருப்பார்கள்.
அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு 40 ‘இசட்பிளஸ்’ கமாண்டோ படையினரையும், கருணாநிதிக்கு 22 இசட்பிளஸ் கமாண்டோ படையினரையும் மத்திய அரசு ஒதுக்கி இருந்தது. அது முடிவுக்கு வந்து விட்டது. இப்போது உள்ள அரசியல் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு தான் உள்ளது. TamilNadu following withdrawal of Z plus Karunanidhis death
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
- திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப மறுப்பு – போலீசாருக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
- க.அன்பழகன் அவர்களை வீட்டில் ஸ்டாலின் திடீர் சந்திப்பு
- சிறுவன் ஒருவரினால் 14 கைதிகளுக்கு பிறக்கும் விடிவுகாலம்
- மீன் பிடிக்க செல்பவர்கள் காணாமல்தான் போகிறார்களா? – மீனவர்கள் கண்ணீருடன் போராட்டம்
- ஆகஸ்ட் 14-ல் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் – கட்சித் தலைமை நிர்வாகம்
- கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : திருச்சி சிவா
- ஓடும் ரயிலில் ”கிக்கி சேலன்ஞ்” செய்த இளைஞர்களுக்கு தண்டனை
- 4 சவரன் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த மர்மநபர்கள்
- திமுக தலைவர் ஆகிறாரா..? ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி?
- திருமுருகன் காந்தியை என்கவுண்டர் செய்ய சதியா? – எங்கிருந்து வந்தது லேசர் லைட் ..? (காணொளி)
- குடும்ப தகராறு காரணமாக இளைஞரை கட்டையால் அடித்தே கொன்ற பெண்கள்
- குடியிருப்பு பகுதிக்குள் சுற்றிய காட்டு யானை – நள்ளிரவில் பிடித்த வனத் துறையினர்
- கண்ணீர் மல்க நண்பனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் என்.சங்கரய்யா