(private Buses strike launched August 12 tamil news)
தமது நெருக்கடிகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில், நாளை தொடக்கம் பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்
சங்கம் அறிவித்துள்ளது.
உரிய அதிகாரிகளுடனான தமது கலந்துரையாடல்கள் தோல்வியுற்றதன் காரணமாக ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் தமது பணி நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள், எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அதற்கு ஏற்ற வகையில் பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதில் உள்ள சட்ட சிக்கல்கள் போன்றவற்றுக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில் இந்த முடிவுக்கு வந்ததாக சங்கத்தின் இணைத் தலைவர் ஸ்டேன்லி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அதற்கான தீர்வுகளை அதிகாரிகள் உரிய காலத்தில் வழங்காத பட்சத்தில் நாளை (12) தொடக்கம் நாடளாவிய ரீதியாக தனியார் பேருந்து சேவைப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
(private Buses strike launched August 12 tamil news)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலிகள்
- மட்டக்களப்பு இளம் ஊடகவியலாளர் கொழும்பில் காலமானார்
- நாவற்குழியில் 62 குடும்பங்களின் காணி விவகாரம்; வழக்கு ஒத்திவைப்பு
- கத்தியைக் காட்டி 59 வயது பெண் பாலியல் துஸ்பிரயோகம்
- காட்டுக்குள் இரண்டு காதல் ஜோடிகள் செய்த செயல்
- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது
- பதுளை பிரதேச சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்