3 பெண்களை காணவில்லை – உயர்தர பரீட்சை எழுத சென்ற மாணவிகள் உள்ளடக்கம்

0
727
Police conducting investigations three girls disappearances

(Police conducting investigations three girls disappearances)

கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகள் உட்பட மூன்று காணாமல் போனமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதியிலிருந்து மூவரும் காணாமற் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பலேல்பொல மஹாபோதி வித்தியாலயத்தில் தரம் -13 இல் கல்வி கற்கும் சன்ஜீவனி குமாரி எதிரிசிங்க, கலேவெல மத்திய மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் பயிலும் தில்மி மதுவந்தி பெரேரா மற்றும் அலங்கர விற்பனை நிலையத்தில் பணிபுரியும் 22 வயதுடைய ஜீ.எம். நிஷன்சலா ஆகிய மூன்று யுவதிகளே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் கலேவெல நகரத்தில் பணிபுரியும் யுவதியே இரண்டு மாணவிகளையும் ஏமாற்றி அழைத்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கலேவெல மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி கொழும்புக்குச் செல்வதாக எழுதிய கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இளம் பெண்களை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

இவர்களின் விவரங்கள் தெரிந்திருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

(Police conducting investigations three girls disappearances)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites