(bangladeshi students march along street protest tamil news)
நெடுஞ்சாலை விபத்துக்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகன சாரதிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டத்தை கொண்டு வர பங்காளாதேஷ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பங்காளாதேஷில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களால் பலர் உயிரிழக்கின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் டாக்காவில் அண்மையில் மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம் பாரிய போராட்டமாக மாறிய நிலையில், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டன.
உயிரிழப்புக்களை ஏற்படுத்துவோருக்கு எதிராக அதிகபட்சமாக தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இதன்போது வலியுறுத்தப்படுகிறது.
தொடர்ந்தும் மாணவர்களின் போராட்டம் நீடித்து வருவதனால், பொலிஸாருக்கும் மாணவர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்படுவதாக பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வர பங்களாதேஷ் அரசாங்கம், வீதி விபத்தில் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் வாகன சாரதிகளுக்கு எதிராக தூக்குதண்டனை விதிக்கும் சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(bangladeshi students march along street protest tamil news)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி பலி
- மாணவனின் கையடக்கத் தொலைபேசியில் 300 ஆபாசக் காட்சிகள்; மயங்கி விழுந்த தாய்
- நண்பனின் காதலனை இரவு முழுவதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நம்பிக்கை துரோகி
- வெளியாளர்களுக்கு காசுக்காக காணி பகிர்ந்தளிப்பு; தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
- ஈஸி கேஷ் (ez cash) முறையில் ஹெரொயின் போதைப்பொருள் விற்பனை
- உணவு ஒவ்வாமை; நால்வரும் பலி – வாதுவையில் சம்பவம்
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- சீதுவை கத்தோலிக்க தேவாலயத்தில் திருட்டு; பொலிஸில் முறைப்பாடு
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!