மத்தல விமான நிலைய விவகாரத்தால் சிக்கலில் மாட்டும் இலங்கை! எச்சரிக்கும் மகிந்த!

0
543
TAMIL NEWS sri lanka government scard provincial elections

இந்தியாவுக்கு மத்தல விமான நிலையத்தை வழங்குவது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை, பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றி இலங்கைத் தீவைச் சிக்கவைக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார். Former President Mahinda Rajapaksa Warning Sri Lanka Government

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

இந்த நடவடிக்கையினால், எமது நாடு பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றிச் சிக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று தங்காலையில் செய்தியாளர்களிடம் பேசிய போதே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites