பியர் போத்தலில் தண்ணீர்தான் இருந்தது – குழந்தைக்கு பியர் கொடுக்கவில்லை – தந்தை வாக்குமூலம்

0
505
father accused providing beer child given statement said water

(father accused providing beer child given statement said water)

தன் குழந்தைக்கு பியர் பானத்தை வழங்கியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள தந்தை தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

பியர் போத்தலில் தண்ணீரே இருந்ததாகவும், தான் குழந்தைக்கு பியரை பருக்கவில்லை எனவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை அறிய குழந்தை அநுராதபுரம் நீதிமன்ற வைத்தியரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியான குழந்தைக்கு மதுபானம் பருக்கும் விதமான காணொளி தொடர்பில் அந்த குழந்தையின் தந்தை உட்பட மொத்தம் நான்கு பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

சந்தேகநபர்கள் நேற்று கல்கமுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் அவர்கள் அனைவரையும் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

(father accused providing beer child given statement said water)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites