முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவே சிறைச்சாலையில் வெற்றிடமாக உள்ள அலுகோசு பதவிகளுக்கு சரியானவர் என பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார். Deputy Minister Thunes Ganganatha Says Gotabaya Suits Position
நேற்று பெல்மதுளை, ரில்லேன பௌத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் ஜனாதிபதி கதிரையில் அமர கோத்தபாய ராஜபக்ஸ அடம்பிடித்து வருவதாக தெரிவித்த துனேஸ் கங்கந்த
இலங்கையில் ஜனாதிபதியை தெரிவு செய்வது மஹிந்த ராஜபக்ஸ அல்ல எனவும் நாட்டு மக்களே தெரிவுசெய்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தாமரை மொட்டு கட்சிக்குள் பிரச்சினை எழுந்துள்ளதாக தெரிவித்த துனேஸ் கங்கந்த
ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதே அந்த பிரச்சினை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படியோ ராஜபக்ஸர்களில் ஒருவரைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்போகின்றார்கள்.
ஜனாதிபதி பதவியை ஒரு பக்கம் வைத்துவிட்டு போகம்பர சிறைச்சாலையில் வெற்றிடமாக உள்ள இரண்டு அலுகோசு பதவிகளுக்கு கோத்தபாய விண்ணப்பிக்கலாம் எனவும் பிரதி அமைச்சர் துனேஸ் கங்கந்த தெரிவித்துள்ளார்
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சிறையில் அமீத் வீரசிங்க உண்ணாவிரதப் போராட்டம்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- யாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு
- பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்