தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திபொன்று இடம்பெறவுள்ளது. election commissioner mahindha deshapriya political party leader meet
இந்த சந்திப்பு நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்ட மூலத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டியது அவசியமாகும்.
இறுதித் தீர்மானம் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குள் மேற்கொள்ளப்படும்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதா? இல்லையா? என்பது பற்றி அடுத்த மாதம் 6ம் திகதி பாராளுமன்றத்தில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 24 தேர்தல் தொகுதிகளை 48 வலயங்களாக பிரித்து தேர்தலை நடத்தினால் அனைத்து வித பிரச்சினைகளுக்கும் தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
tags ;- election commissioner mahindha deshapriya political party leader meet
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!
- நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் கால்பந்து விளையாட்டரங்கில் பெண்களுக்கு அனுமதி
- அர்ஜென்டினாவிற்குள் கால் பதிக்க முடியாதா? மாரடோனாவின் எச்சரிக்கை பலிக்குமா
- இலங்கை கிரிக்கெட் அணியில் இரு யாழ். இளைஞர்கள் : குவியும் பாராட்டு
- குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் ஜிம்பாப்வே ஜனாதிபதி
- 14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீதான தடை : பாராளுமன்றில் முழங்கிய மஹிந்த
- தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவத்தலைவன் பலி
- ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கான காரணம் இதுதான்..!
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!