(tamilnews kasaltree missing boy body found dead)
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இன்று (23) மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்ட சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் அலூவெள்ள பிரதேசத்தில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன் காணாமல் போய் உள்ளதாக பொலிஸாரக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் காணாமல் போனதாக கருதப்படும் இளைஞனுடையது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இளைஞர் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டாரா என்பது தொடர்பாக பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரைணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(tamilnews kasaltree missing boy body found dead)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அதிரடி ஆட்டத்தால் சேர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து
- சிறுத்தையை கொலை செய்த கிளிநொச்சி வீரர்களை கைதுசெய்ய உத்தரவு
- கிளைமோரில் இலக்கு வைக்கப்பட்டது சுமந்திரனாம் – முல்லைத்தீவு சம்பவம் தொடர்பாக பொலிஸார் அதிர்ச்சி தகவல்
- சிறுத்தையை கொன்றவர்களை சிறையில் அடைக்க முஸ்தீபு; தமிழர்கள் மீது பாரபட்சம்
- நண்பர்களால் தாக்கப்பட்ட மாணவன் மொஹமட் கோமா நிலையில் – மூன்று மாணவர்கள் கைது
- 125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை
- ‘ஸ்மார்ட் நகரங்களை’ இலங்கையிலும் நிர்மாணிக்க திட்டம்
- தேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு தேரர்கள் மீது தீவிர விசாரணை