பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் காவி உடையுடன் சிறைத் தண்டனை அனுபவிக்க இடமளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. (injustice Hindu cleric prison)
அத்துடன், ஞானசார தேரர் சிறைச்சாலை ஆடையை அணிய இடமளிக்கக் கூடாதென போர்க்கொடி தூக்கப்பட்ட நிலையில், அந்தக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
மூன்று வருடங்களாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் பிரம்மஸ்ரீ ரகுபதி சர்மா ஐயா சிறைச்சாலையில் ஜம்பர் அணிவிக்கப்பட்டே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இன்று வரை ஜம்பருடன் தான் சிறையில் உள்ள நிலையில், சிறையிலுள்ள அதிகாரிகள் அவரை வேட்டி அணிந்து நீதிமன்றம் செல்லக்கூட விடாத நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.
இந்த நிலையில், பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தனியான சலுகைகள் வழங்கப்படாது என்றும் ஏற்கனவே, தண்டனை அனுபவிக்கும் 15 பௌத்த பிக்குகளைப் போன்றே அவரும் சாதாரண கைதியாகவே நடத்தப்படுவார் என்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவருக்கு கைதிகள் வழக்கமாக அணியும் அரைக் காற்சட்டையே வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 18 பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களில் ஒரேயொரு இந்து மதகுருவான பிரம்மஸ்ரீ ரகுபதி சர்மா ஐயா சிறைச்சாலையில் ஜம்பர் அணிவிக்கப்பட்டு, தண்டனை பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
tags :- injustice Hindu cleric prison
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஞானசார தேரருக்கு அரைக் காற்சட்டையே வழங்கப்படும்; தனியான சலுகை வழங்கப்பட மாட்டாது
- மக்காவின் புனித தன்மைக்கு களங்கம் விளைவித்த நபர்!
- விண்வெளிப்படையை அமைக்க உத்தரவிட்ட அதிபர் டிரம்ப்! அப்போ ஏலியன்கள் உண்மை தானே?
- பிக் பாஸ் முடிவில் கிடைக்கும் லாபம் எவ்வளவு தெரியுமா..? : 1,140 கோடியாம்..!
- முஸ்லிம்களினால்தான் பொதுபலசேனா தோன்றியது!!
- 70 அரச நிறுவனங்கள் முஸ்லிம் அமைச்சர்கள் வசம் – மனோ!!
Tamil News Group websites