நடுக்கடலில் சிக்கிய 5 மீனவர்கள் – காப்பாற்றிய இலங்கை கடற்படை

0
836
tamilnews sri lanka navi rescued five fishermen point pedro

(tamilnews sri lanka navi rescued five fishermen point pedro)

பருத்தித்துறை கடற்பகுதியில் வழிதவறி சென்ற நிலையில் சிக்கியிருந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர்களின் படகில் ஏற்பட்ட இயந்திர காரணமாக அவர்கள் நடுக்கடலில் தவித்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக கடற்படை தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 26 கடல் மைல் தொலைவில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றின் மூலம் அவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

(tamilnews sri lanka navi rescued five fishermen point pedro)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites