புத்தளத்தில் அகோர விபத்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

0
399
accident one men die two people wounded hospital putalam palavi

புத்தளம் கல்லடி பாலவி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். accident one men die two people wounded hospital putalam palavi

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பை சேர்ந்த 49 வயதுடைய பிரசாத் பெர்னான்டே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதிவேகமாக பயணித்த ஜீப் வண்டியொன்று வேகக் கட்டுபாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி; மதில் ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
accident one men die two people wounded hospital putalam palavi

More Tamil News

Tamil News Group websites :