நஜீப்பின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் கணக்கெடுப்பு தொடர்கின்றது!

0
772
Survey money najib seized continues, malaysia tami news, malaysia, malaysia news, najib,

{ Survey money najib seized continues }

மலேசியா: கடந்த வெள்ளிக்கிழமை பெவிலியன் ஆடம்பர அடுக்ககத்திலுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு தொடர்புடைய வீட்டில் போலீஸ் பறிமுதல் செய்த மலேசியா மற்றும் வெளிநாட்டு பணங்களின் கணக்கெடுப்பு இன்னமும் தொடர்வதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகம்ட் ஃபுஸி கூறியுள்ளார்.

புக்கிட் அமான் குற்ற புலனாய்வுத் துறை கடந்த மே 21ஆம் திகதி முதல் இந்த கணக்கெடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தி ஸ்டார் இணையத்தள பதிவேடு செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு பணங்களின் எண்ணிக்கை இன்னமும் கணக்கிடப்படவில்லை. மாறாக கைப்பற்றப்பட்ட நகைகள், ஆடம்பர பொருட்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக இதர தனியார் நிறுவனங்களுடன் தேசிய வங்கியும் களமிறங்கியிருப்பதாகக் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல நாடுகளின் பணங்கள் கைப்பற்ற பட்டிருப்பதால் கணக்கெடுக கால தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக அனைத்தும் முறையாக கணக்கெடுக்கப்படுவதை போலீஸ் உறுதி செய்வதாகவும் போலிஸ் படை தலைவர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு சொந்தமான அடுக்ககம் என கூறப்பட்ட 5 இடங்களில் போலீஸ் பணங்கள் நிரம்பிய 72 சூட்கேசுகளையும், ஆடம்பர பொருட்கள் அடங்கிய 284 பெட்டிகளையும் கைபற்றியுள்ளார்.

Tags: Survey money najib seized continues

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியாவில் அமைச்சர்களின் சம்பளம் 10 வீதம் குறைக்கப்படுகின்றது: மகாதீர் அறிவிப்பு!

*ஊடக சுதந்திரத்துக்கு முன்னுரிமை ..! கோபிந்த் சிங்

*மலேசியா முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் நான்கு மணி நேரம் விசாரணை !

*லிங் லியோங் சிக் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நஜிப்..!

*முன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்!

*துன் மகாதீரின் அனுபவங்களும் திறமையும் மலேசியாவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரும்..!

*ஜொகூர் சுல்தானுடன் 2 மணி நேரம் சந்திப்பு நடத்திய அன்வார்!

*எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்!

<<Tamil News Groups Websites>>