வீரர்களின் கைகளில் கறுப்புப்பட்டி!!! : காரணம் என்ன?

0
1305
sunrisers hyderabad team player wore black armbands

(sunrisers hyderabad team player wore black armbands)

ஐ.பி.எல். தொடரின் நேற்றைய முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் இரண்டு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், சென்னை அணி 2 விக்கட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய ஹைதராபாத் அணியின் வீரர்கள் கறுப்பு நிற பட்டி ஒன்றினை தங்களது கைகளில் அணிந்து விளையாடியிருந்தனர்.

இதற்கான காரணம் என்னவென்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது இதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்திருந்தனர்.

குறித்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே வீரர்கள் கறுப்பு பட்டியை அணிந்து விளையாடியுள்ளனர்.

ஹைதராபாத் அணியில் ரஷீட் கான் மற்றும் மொஹமட் நபி ஆகிய இரண்டு ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடுகின்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>