அடைமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 27 மில்லியன் ஒதுக்கீடு

0
622
27 million rupees allocated need food victims irregular climate dmc

(27 million rupees allocated need food victims irregular climate dmc)

கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் உணவு தேவைக்காக 27 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் அமல்நாதன் தெரிவித்துள்ளார்.

அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக முப்படைகளையும் சேர்ந்த சுமார் 5000 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் காலி மாவட்டத்தின் நாகொட, வெலிவிட்டிய, திவித்துர, பத்தேகம, போப்பே, பொத்தல போன்ற பிரதேசங்களில் உள்ள தாழ்நிலங்களும், வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

அவசர நிலைமைக்கு முகங்கொடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி மாவட்ட உதவிப் பணிப்பாளர் தம்பத் ரத்நாயக்க தெரிவித்தார்.

(27 million rupees allocated need food victims irregular climate dmc)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :