பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவரின் நிலை!

0
511
Euro 2016 attacker jailed 6 years Ukraine

சுமார் இரு வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் நடத்த முற்பட்ட நபர் ஒருவருக்கு உக்ரைன் நாட்டில் ஆறுவருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Euro 2016 attacker jailed 6 years Ukraine

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த குறித்த பயங்கரவாதி, பிரான்ஸில் இடம்பெற்ற Euro 2016 உதைப்பந்தாட்ட போட்டியின் போது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்.

குறித்த நபர் கடந்த 2016 ஆம் ஆண்டு உக்ரைன்-போலிஷ் நாடுகளுக்கிடையேயான எல்லையில் வைத்து உக்ரைன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு வருட விசாரணைகளின் பின்னர், நேற்று திங்கட்கிழமை குறித்த நபருக்கு ஆறு வருட சிறைத்தண்டனை வழக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**