northern province chief minister include all embers waste wijayadasa
வட மாகாண மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக வட மாகாண சபை அர்ப்பணிப்புடன் செயலாற்ற தவறியுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வட மாகாண சபை அதிக கவனம் செலுத்துவதை தாம் ஒரு போதும் அவதானித்ததில்லை.
தமது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவும் அதனைத் தக்கவைத்துக்கொள்ளவும் ஒருவருக்கு ஒருவர் முரண்படுகின்றார்களே தவிர மாகாண மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப சிறந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் காணமுடியவில்லை.
போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகள் என்பனவற்றின் பயன்பாடு பரவி வருவதால் வடக்கு இளைஞர் யுவதிகளின் வாழ்வு அபாயமான நிலைக்குள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பில் பிரதேத்தில் உள்ள மற்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் இவற்றைப் பற்றி கருத்து வெளியிடுவதைக் காண முடியவில்லை.
வட மாகாண மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பில் அதிக அக்கறை செலுத்தினால் இளைஞர் யுவதிகளை போதை பொருள் கலாசாரத்திலிருந்து பாதுகாத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேன்மை அடைய செய்ய முடியும் என விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
northern province chief minister include all embers waste wijayadasa
More Tamil News
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
- வடமாகாண சபையின் கொடி பாடசாலைகளில் அரைக்கம்பத்தில்
- தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்; தாயகத்தில் கடையடைப்பு
- கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள நந்திக்கடலில் அஞ்சலி
- தங்க நகைகளைத் திருடியவர் சிசிரிவி கமராவில் சிக்கினார்
- யாழ். பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
- முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்
- கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com