சட்டம் ஒழுங்கு குறித்து திமுக பேசக்கூடாது – அமைச்சர் ஜெயக்குமார்

0
509
DMK Minister Fisheries Minister Jayakumar said would speak
DMK Minister Fisheries Minister Jayakumar said would speak

DMK Minister Fisheries Minister Jayakumar said would speak

சட்டம் ஒழுங்கு குறித்து தி.மு.க. பேசக்கூடாது என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் சட்டம் ஒழுங்கு குறித்து தி.மு.க. விமர்சிப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளர்.

அதற்கு பதிலளித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,

சட்டம் ஒழுங்கு குறித்து தி.மு.க. பேசக்கூடாது. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும்.

சென்னை மத்திய சிறையில் எரித்து கொல்லப்பட்டமை சென்னை சட்டக்கல்லூரி மோதல், சென்னை மேல்நீதிமன்றத்தில் நீதிபதி மண்டை உடைக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் அமைச்சர் முன்னிலையில் கொல்லப்பட்டமை இவை எல்லாம் தி.மு.க. ஆட்சியில் அரங்கேறியது.

தற்போது தமிழகம் அமைதி பூங்காவாக செயல்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் பொலிஸார் செயல்பட முடியாத நிலையில் இருந்தது. தி.மு.க. ஆட்சியில் டிசம்பர் 6 வரும்போதெல்லாம் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது.

சசிகலா திவாகரனுக்கு மனு அனுப்பியது அவர்களின் குடும்ப பிரச்சினை, அவர்களின் குடும்ப பிரச்சினை குறித்து பேச விரும்பவில்லை. கூட்டணி குறித்து பேச இது நேரமில்லை. தேர்தல் சமயத்தில் கட்சி தலைமை இதுகுறித்து முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.

DMK Minister Fisheries Minister Jayakumar said would speak

More Tamil News

Tamil News Group websites :